சனி, 22 ஜூன், 2013

நாகரிகம்

இது இக்காலத்து இளைஞர் சமுகம் அறிந்து, புரிந்து, தெளிந்து பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் .

ஒரு மூன்று நாட்களுக்கு முன்னர் வாடகை மகிழுந்தில் (taxi) செல்லும் போது, நானும் ஓட்டுனரும் பேசிக்கொண்டிருந்தோம் , அப்போது ஓட்டுனர் சாலையோர உணவகங்களில் மக்கள் கையினால் உணவு உண்டு கொண்டிருப்பதை பார்த்த அவர், நீங்கள் ஏன் கையினால் உணவருந்துகிறீர்கள் ? ஸ்பூன் வைத்து சாப்பிடுவதே நாகரிகமானது என்று கூறினார். நான் அவரிடம் பதிலுக்கு " இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று இந்த உலகிற்கே நாகரிகம் கற்று கொடுத்தவர்கள் நாங்கள். நாகரிகம் என்பது உன் உடையிலோ, நடையிலோ , உணவருந்தும் முறையிலோ இல்லை, அவை எல்லாம் நம் வசதிக்காக (comfortablity) மட்டுமே, நாகரிகம் என்பது நம்முடைய செயலில், பேச்சில், எண்ணங்களில் இருக்கிறது என்றேன்.

அவர் இதைகேட்டு ஆம் என்று ஒப்புக்கொண்டார், அவர் சொன்னார் நாங்கள் ஸ்பூனை பயன்படுத்தி பழகி கொண்டோம். நான் "நாங்கள் கையினால் உணவு உண்டு பழகிவிட்டோம்" என்று கூறி இவையெல்லாம் நம்முடைய பழக்கத்தில் வருவது ஒழிய நாகரிகம் எனப்படாது என்று பதிலுரைத்தேன்.

நடந்த இடம் : சிங்கப்பூர்

ஓட்டுனர் : சிங்கப்பூர் சீனர்

நான் : தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக