சனி, 22 ஜூன், 2013

மடை மாற்றம் செய்யலாமே?

பத்திரிக்கை செய்தி : உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது.

# பாய்ந்து வரும் வெள்ளத்துக்கு சிலைன்னு தெரியுமா? கல்லுன்னு தெரியுமா? சமாதின்னு தெரியுமா? லிங்கமாவது, சிவனாவது, பார்வதியாவது எதிரே உள்ள எல்லாத்தையும் அள்ளித்தான் செல்லும். லிங்கம் தான் சக்தி வாய்ந்ததே, தன் சக்தியின் மூலம் ஓடி வந்த வெள்ளத்தை "வேறு வழியில் போ, என் குறுக்கே வராதே" என்று சொல்லி இருக்கலாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக