வெள்ளி, 14 நவம்பர், 2014

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிக்கிறது எப்படி!!!!

"சிறந்த பேச்சாளார் ஆவது எப்படி" என்ற கேள்விக்கு சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக பதில் சொல்லப்பட்டு வருகிறது. இதில் நமக்கு முழுமையாக உடன்பாடு இல்லையெனிலும் தோழர் மதிமாறனின் "பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்" உரை மீதான விமர்சனத்தை சிரித்துக் கொண்டே எழுதுகிறேன். தமிழ் தேசியர்களுக்கு கொடுக்கப்பட்ட அடி அப்படி!!!

"எனக்கு தலைப்பு கொடுத்திருக்காங்க, பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்"இந்த புதியதமிழ் தேசியங்கள் அப்படிங்கறதுக்கு ரொம்ப பழைய உதாரணம் ஒன்று சொல்றேன், அது புதிய மொந்தை பழைய கள்" என்று தான் தனது பேச்சை ஆரம்பித்தார் தோழர் மதிமாறன்.   அட என்னங்கடா, தமிழ்தேசியமாவது, அதில என்னடா புதுசு பழசு உங்க தேசியம் எல்லாம் சாதியதேசியம் தான்டா, இந்த சாதிய விளக்கமாத்துக்கு எதுக்கு பட்டுக்குஞ்சம்  எதுக்குடான்னு எடுத்தஎடுப்பிலே தமிழ் தேசியர்களின் சாதிய அபிமானத்தை அம்பலப் படுத்தினார் தோழர்.

தமிழ் தேசியர்களின் சாதிய வெறியை  இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லனும்னா, ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.  உலகத் தமிழர் பேரவை, உள்ளூர்த் தமிழர் கூட்டமைப்பு, அண்டார்டிக்கா தமிழர் மாநாடு, ப்ளுட்டோ, நெப்டியூன் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ன்னு தன்னாலே எண்ணவியலாத அளவிற்கு இயக்கம் ஆரம்பித்து ஈழத் தமிழர்களை கழுத்தறுத்த    அய்யா 
பழ நெடுமாறனின் தமிழ் தேசியம், முக்குலத்தோர் சாதிய வெறியை உருவாக்கிய மன்னார்குடி நடராஜன்  (சசிகலா கணவர்) காலடியில் வீழ்த்து கிடப்பதே இதற்கு ஒரு உதாரணம். சீமான், ராமதாஸ் ன்னு  இந்த மாதிரி பட்டியல் போட்டால் டன் கணக்கில பேப்பர் வேணும்.

"சிறந்த பேச்சாளர்களாக உருவாவது எப்படி" என்ற கேள்விக்கு  பதிலை மதிமாறன் தனதுபேச்சினூடே நேரடியாக சொல்லாமல் தன்  முழுப் பேச்சால் உணர்த்திச் சென்றார். அந்தப் பதில்உண்மையை தைரியமாக பேசுவது”.  எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டி, நீட்டி முழக்கி பேசாமல்,உண்மையை தைரியமாக பேசுவது மதிமாறனின் சிறப்பு. அதற்கு சிறந்த உதாரணம், இன்று திராவிடர்கழகத்தால் நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராக கொண்டாடும் தியாகராய செட்டியார் போன்றோரின் பார்ப்பன சடங்கு அடிமைத்தனத்தை திராவிடர் கழகத்தின் விடுதலைவாசகர் வட்ட பேச்சரங்கில் அம்பலப்படுத்தியது தான். 

பெரியார் அரசியல் அரங்குக்குள் வருமுன்  திருவிக, வரதராஜுலு நாயுடு
ஆர் கே சண்முகம் செட்டியார், மறைமலை அடிகள் போன்றோர் எப்படிப்பட்ட அரசியலை மேற்கொண்டனர், பெரியாரின் வருகைக்குப் பின்னர் அவர்களின் அரசியல் முகம் என்பதை மாறினது என்பதை வரலாற்று உண்மைகளுடன் தோழர் எடுத்துக்காட்டியது அவரின் உண்மையை மறைக்காது எடுத்தியம்பும் இயல்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.


காங்கிரஸ் அந்தக்காலத்தில் இருந்தே கைக்கூலிகளாக, அடிமைகளாக பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எதிராக பார்ப்பனர் அல்லாதவர்களையே   தன் கையை வைத்து தன் கண்களை குத்தும் நயவஞ்சக  வேலையை செய்ய முயன்றது என்றும் அந்த முயற்சியின் ஒருபகுதிதான் ராமசாமி நாயக்கர் (அதாங்க நம்ம பெரியார்)  ராஜாஜியினால், காந்தி மீது கொண்ட பாசத்தினால்காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார் என்பதை மறைக்காமல் சொன்னது தோழர் மதிமாறனின் நேர்மையின் சிறப்பு. 

ஆனால் காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன அடிமைத்தனத்தை புரிந்து கொண்ட பின்னர் பெரியார்கட்சியை விட்டு வந்தார் என்பதை அக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை வரலாற்றுஉண்மைகளுடன் எடுத்து சொல்லியது நன்று.

பெரியார் ஒன்றும் தானாக வானில் இருந்து தலைவராக குதித்து வந்துவிடவில்லை, அன்றிருந்த பார்ப்பன ஆதிக்க சமுக சூழல்தான் பெரியாரை போராட தூண்டியது என்று வெற்றிடத்தை காற்று நிரப்பும்என்ற இயங்கியல் தத்துவத்தை நேர்மையுடன் எடுத்துரைக்கிறார் தோழர்.

பாரதிதாசன் பாரதியின் உண்மையான தாசனாக இருந்தபோது எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடினான். அதைப்போல, அன்று இருந்த "எங்கெங்கு காணினும் பார்ப்பன ஆதிக்கமே",  "ராமசாமி நாயக்கரை" முதலில் "ராமசாமியாகவும்"  பின்னர் "பெரியாராகவும்" மாற்றியது என்ற வரலாற்று உண்மையை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் தோழர்.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய திருவிக, மறைமலை அடிகள் போன்ற அன்றைய தமிழ் தேசியர்கள்தொட்டு, இன்றைய காசி ஆனந்தன்,  
பழ நெடுமாறன், மணியரசன் போன்ற புதிய தமிழ் தேசியர்களின்சாதிய அபிமானத்தை, பார்ப்பன அடிவருடித்தனத்தை ஒப்பிட்டுத்தான்  புதிய மொந்தையில்  பழையகள்என்று தோழர் தனது பேச்சை ஆரம்பித்த தோழர்ஆண்டுகள்  ஆயிரம் ஆனாலும், “தமிழ்தேசியமும் பார்ப்பனிய அடிமைத்தனமும்  சாதிய உணர்வும்நகமும் சதையும் போல ஒன்றுடன் ஒன்றை பிரிக்க இயலாதவை என்று அடித்து நொறுக்கினார்.

சாதியத்தை சமரசம் இல்லாமல் எதிர்க்கும் பெரியாரின் நேர்மையின்  முன்னால் இன்று பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்களின் சாதிய அபிமானம் எங்கே என்று அனல் பறந்தது தோழரின் பேச்சு.

கிரேக்கம், ஏதென்ஸ், ஸ்பார்ட்டகஸ், கரிபால்டி”,  தம்பி பிரபாகரன், வைகோ.  அய்யகோ வைகோவின் நிலை பரிதாபம் !!! வெற்றுப் பேச்சாளர்களின் நிலை அதுவாகத்தான் இருக்கமுடியும்!!!  "பாரதீ" யும் தப்பவில்லை! ஆனால் மபொசி, ஜீவா போன்றோர் தப்பிவிட்டனர்.

தமிழ் தேசியர்களின் தமிழ் உணர்வு என்பதே பார்ப்பன அடிமைப் புத்திதான் என்பதை தலையில்கொட்டி சொன்னது அழகு. ஜீவா, மாபொசி என்று அன்றிலிருந்து, ரவிக்குமார்,நெடுமாறன்,மணியரசன், சீமான் போன்ற தமிழ் தேசிய அபிமானிகளால் என்றும்  பெரியாரின் தாடி மயிரைக் கூட அசைக்க முடியாது என்ற சவாலுடன் தன் பேச்சை முடித்தது சிறப்பு.


டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிக்கிறது எப்படின்னு தோழரின் பேச்சை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பேச்சின் தன்மை கெட்டுவிடாது இருக்கவேண்டும் என்பதற்காக நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.  இன்னும் பலவித சிறப்புகள் தோழர் மதிமாறனின் பேச்சில் உள்ளன.

 நீங்களும் கேட்டு பலரிடம் பகிருங்கள்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

பெரியார் ஏன் பெரியார் என் பார்வையில்!!!

 மார்பில் விழும் வெண்தாடியோடு
தள்ளாடாமல் நடக்க ஊன்றி வரும் தடியோடு
கையில் மூத்திரச்சட்டியோடு
 
 தமிழர் மானத்திற்கு சுயமரியாதைக்கு
பகுத்தறிவுத்  துணையோடு
 
ஊரெங்கும் நாடெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் மூடர் கூட்டத்தோடு

தன் அறிவுச் சொற் கோடரியால் போராடும்
கிழவன் ஒருவன்  தமிழ்நாட்டுத்
தெருக்கள் எங்கும் தட்டுப்பட்டதைக் கண்டோம்
 
எது உன் ஊர் எனக் கேட்டோம்?
பதில் கிடைத்தது ஈரோடு
பெற்றெடுத்த அறிவுக்களஞ்சியம் நீ என
 
என்ன செய்கிறாய் எனத் தெரிந்துகொள்ள
ஆசைப்பட்டோம் அறிவுத் தேடலோடு

சட்டெனப் பதில் வந்தது
சாதியினை அறுத்தெறிந்தாய் வேரோடு
 
நாங்கள் கேட்டோம் என்னசெய்ய
வேண்டும் உன்னோடு சேர்ந்து கொள்ள
 
மானமும் அறிவும் பெற எங்களையும்
உன்னோடு சேர்ந்து போராடு எனச் சொன்னாய் 
 
அறிவு பெற்றோம் தெளிவு பெற்றோம்
உரிமை பெற்றோம் இழிவுநீங்கப் பெற்றோம்
 
உன் கடன் அடைக்க ஏது வழி
என யோசிக்கப் பெற்றோம்
 
அதனால் தான் பெரியார் என இணைத்தோம்
உன் பேரோடு
 
சாதியோடு சடங்கோடு போராடி
மண்ணோடு பெயர்த்த உன்னை
 
யாரோடு சமம்நீ என நினைத்துப்பார்க்க
இயலாமல் திக்குமுக்காடுகிறது அறிவுலகம்

சு.விஜயபாஸ்கர் - Nov 05 2014
 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

எதையெதயோ கேட்ட.. இதை கேட்டயாடா?

நம்ம கதாநாயகன் ஒருநாள் வழக்கறிஞரிடம் சென்று எனக்கு திருமணமுறிவு வேண்டும், நீங்கள் தான் பெற்றுத்தரவேண்டும் ன்னு சொல்றாரு.
வழக்கறிஞரோ, "அதனாலே என்னப்பா, பீஸ் கொடுப்பா, என்ன வேணுனாலும் வாங்கி தாரேன்" ன்னு தனது வேலையில் குறியா இருக்குறார்.
தயங்காத நம்ம நாயகன் சட்டைப்பையில் இருந்து சில ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து "சார், நீங்கதான் என்னை காப்பாத்தனும், இந்தாங்க சார், அஞ்சாயிரம் ரூபாய் இருக்கு, மிச்சத்தை பின்னாடி  தர்றேன்" ன்னு சொல்லி  கையை நீட்ட முயற்சி செய்யும் போதே,  நம்ம டுபாக்கூர் வக்கீல் வண்டுமுருகன், பாய்ஞ்சு போய் பணத்தை புடுங்கி, "கவலையை விடுங்க, எல்லாம் நான் பாத்துகிடுறேன்"  சொல்லிட்டு "திருமண முறிவு வாங்கலாம், ஆனால் எதுக்குப்பா? கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ள கசந்து போச்சா? என்ன ஆச்சு" ன்னு கொஞ்சம் அக்கறையோடு விசாரித்தார்.

"அதுவந்து சார், சார்",
அதான் வந்துட்டல்ல, சொல்லுப்பா,

"அதுவந்து, இதுவந்து சார், அத எப்படி சொல்ல சார், நான் எப்படி சார்  அத சொல்ல".
என்னப்பா, வாடகைக்கு ஆள் வச்சா சொல்ல முடியும், உன் வாயை வச்சுதான் சொல்லனும்ப்பா. தயங்காம சொல்லு,

ஆனாலும் நம்ம நாயகன் தயங்கிதயங்கி, வக்கீல் காதுக்குள்ள ரகசியமா சொன்ன விஷயத்தை நான் ஓட்டுகேட்டு உங்களுக்கு சொல்றேன், கீழே படிச்சு பார்த்துக்கோங்க.

நம்ம கதாநாயகன் ஒரு நாளில் நம்ம கதாநாயகியை ஒரு அழகான தெருவோரத்தில் சந்திக்கிறார்.  அது ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிடுகிறது, ஆனால் அண்ணலும் நோக்க அவளும் நோக்க, கண்கள் சந்தித்தன.  காதலும் கனிவும் கவிதையும் செல்பேசி எண்ணும் நொடிப்பொழுதில் பரிமாறப்பட்டன.

பிறகென்ன பேச்சுதான். காலையில் பேச்சு, மாலையில் பேச்சு, இரவில் பேச்சு, கழிவறையில் ஓய்வெடுக்கும் போதும் பேச்சு, தூங்காமலும் பேச்சு. தின்னாமலும் பேச்சு. முழித்தால் பேச்சு,  விழித்தால் பேச்சு, நின்றால் பேச்சு, நடந்தால் பேச்சு,  செல்போன் சார்ஜ் தீர்ந்தாலும், சார்ஜ் ஏத்தியபின்னும் பேச்சு, அப்படி என்னதான் பேசினார்கள்


உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்,
நான் சப்பாத்திதான் சாப்பிடுவேனாக்கும், டயட் கான்சியஸ்.

ப்ளூ கலர் டிரஸ் பிடிக்குமா?
எனக்கும் ப்ளுவும்  பிடிக்கும், பிங்க்கும் பிடிக்கும், எல்லாம் பிடிக்கும், நீ எனக்கு டிரஸ் எடுத்து  கொடுத்தா சாணி கலர் கூட பிடிக்கும்.

எனக்கு சிவகார்த்திகேயந்தான்ப்பா பிடிக்கும், அவன் அழகே தனிப்பா. அவன்னா பொண்ணுகளுக்கு செம கிரேஸ்பா. என் ஆபீஸ்ல எல்லாரும் சிவா பேன்ஸ்..
எனக்கு எல்லா நடிகையும் பிடிக்கும்    பொம்மைக்கு சேலைகட்டி விட்டாலும்
நான் நாள் முழுவதும் பார்ப்பேன். எனக்கு அதுல பாரபட்சமே கிடையாது, பட் இனிமே நீதான் எனக்கு பிடிச்ச ஹீரோயின்,  சாகுற வரைக்கும் உன் மூஞ்சை பார்த்துக்கிட்டே சந்தோசமா சாவேன். ஐ லவ் யு சோ மச் மி டியர்.

நீ சார் வச்சு இருக்கியா, எனக்கு ஆடி கார்ல லாங் ஜர்னி போறது பிடிக்கும்ப்பா
வாங்கிரலாம் டியர்.

ஹனிமூன் ஐரோப்பியன் கன்ட்ரீஸ் போலாமா டியர்?
நீ என்கூட வரும்போது நரகத்துக்கு கூட நான் வர தயார் டியர்.

நம்ம பர்ஸ்ட் சைல்டுக்கு நான்தான் பேர் சூஸ் பண்ணுவேன்.
யுவர் சாய்ஸ் இஸ் மை சாய்ஸ் ஹனி.

பட் நான் சொல்ற ஸ்கூல்லதான் சேக்கணும் டியர்,
ஓகே மச்சான், அறிவுக்கும் எனக்கு ராசி இல்லை அத்தான்.,  நீயே அந்த டிபார்ட்மென்ட் மேனேஜ் பண்ணுங்க அத்தான்.


இப்படி உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல் வரை பேசினாங்க நம்ம ஐடியல் ஜோடி. இவன் கேக்காத விஷயம் இல்லை, அவ சொல்லாத விஷயம் இல்லை, இவங்க பேசினது போதாதுன்னு, ரெண்டு பேரு அப்பா அம்மாவும் சொந்தகாரங்க முதற்கொண்டு பேசி பந்தக்கால் நட்டுனாங்க. நாளும் கிழமையும் பார்த்து கல்யாணமும் முடிச்சு வச்சாங்க.

பிறகு என்னப்பா பிரச்சினைன்னு கேக்குரீங்கதானே?

நம்ம நாயகன் மெதுவா, சங்கட்டப்பட்டு, தயக்கப்பட்டு  வக்கீல் வண்டு முருகன் காதில சொன்ன விஷயம் இதுதான் மக்களே.

"சார் என் வைப் வயசுக்கு வரல, சார்"


நம்ம வண்டுமுருகனுக்கு வந்ததே கோபம், கால்ல போட்டு இருந்த ஷூவை கழட்டி, செம அடி.  என்னை கலாய்க்கனும்னே  வருவீங்களாட ராஸ்கல்ஸ்.
"பிறக்காத குழந்தையை எந்த ஸ்கூல் ல சேக்கணும் கேட்ட நாதாரி, கேக்க வேண்டிய மேட்டரை கேட்டயாடா"

தப்பிச்சேன், பிழைச்சேன்னு, பின்னங்கால் பிடதியில்  அடிக்க ஓடிய நம்ம ஹீரோ, நெக்ஸ்ட் விழுந்த இடம், விவாகரத்து ஸ்பெசலிஸ்ட் வக்கீல் வனஜா


### கதை சொல்லும் நீதி ###  திருமணத்திற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை தேவை, அவசியம், கட்டாயம்.

பின்குறிப்பு : "திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை: - நீதியரசர் என். கிருபாகரன்" என்ற செய்தியை படித்த பாதிப்பில் எழுதப்பட்டது. பெண்களை அவமதிக்கும்  நோக்கில் எழுதப்படவில்லை. இன்னும் சிலதினங்களில் ஆண் வெர்சன் கதையும் சங்கத்தால் வெளியிடப்படும்.