சனி, 22 ஜூன், 2013

பகத் சிங் - சில குறிப்புகள்

வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முதல் கட்டமே. இறுதிப்போராட்டம் சுரண்டலுக்கு எதிராக நடக்க வேண்டியுள்ளது.
சமூக, பொருளாதார சுதந்தரமில்லாமல் கிடைக்கும் வெறும் அரசியல் சுதந்தரம், ஒரு சிலர் பலரைச் சுரண்டும் சுதந்தரமாகவே இருக்கும்.
(பகத்சிங் தன் நண்பர்களுடன் விவாதித்தவை).
..............

எனது உயிர் அந்த அளவுக்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாக கொடுத்து வாங்குமளவுக்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையது அல்ல. (1930 அக்டோபர் 4ல் பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்திலிருந்து --- சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் தொடர்பில்லை என அவரது தந்தை தீர்ப்பாயத்துக்கு கடிதம் எழுதியமைக்கு பகத்சிங் எழுதிய பதில் கடிதம்).
...............

செவிகளுக்கு கேட்பதற்காகவே குண்டு வீசப்படுகிறதேயன்றி எவருடைய உயிரையும் பறிப்பதற்காக அல்ல.( பகத்சிங் மற்றும் தோழர்கள் பாராளுமன்றத்தில் வீசிய பிரசுரத்தில் இருந்து)
...............

எனக்கும் வாழ்க்கையின் கவர்ச்சிகளை அனுபவிக்கவேண்டும் எனும் ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் என்னால் துறந்துவிடவும் முடியும்.( 1929 ஏப்ரல் 5 அன்று பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

மடை மாற்றம் செய்யலாமே?

பத்திரிக்கை செய்தி : உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது.

# பாய்ந்து வரும் வெள்ளத்துக்கு சிலைன்னு தெரியுமா? கல்லுன்னு தெரியுமா? சமாதின்னு தெரியுமா? லிங்கமாவது, சிவனாவது, பார்வதியாவது எதிரே உள்ள எல்லாத்தையும் அள்ளித்தான் செல்லும். லிங்கம் தான் சக்தி வாய்ந்ததே, தன் சக்தியின் மூலம் ஓடி வந்த வெள்ளத்தை "வேறு வழியில் போ, என் குறுக்கே வராதே" என்று சொல்லி இருக்கலாமே

பக்தி பகுத்தறிவை முடக்கும்

நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் இறை நம்பிக்கையாளர். நான் இறை மறுப்பாளன். ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள். நான் பலமுறை அவரையும், இறை நம்பிக்கையையும், கையாலாகாத கோடிக்கணக்கான கடவுள்களையும் கேலி பண்ணும் போது, அவர் சில மறுப்பும் சொல்லுவார் பல நேரங்களில் பதில் இல்லாமல் சிரிக்கவும் செய்வார். இப்படியே கடந்த காலங்கள் பல. அந்த வகையில் நேற்று வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை பற்றியும் பேசினோம். 
நான்: அடேய் நண்பா, உங்கள் கடவுள்தானே, இந்த உலகத்தை, ஆறுகளை, மலையை, மழையை மற்றும் மக்களை எல்லாம் உருவாக்கினார், பின்பு ஏன் இந்த மாதிரி பெருவெள்ளம் வந்து இலட்ச கணக்கான மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதை உங்கள் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்? அதுவும் இன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டோர் பலர், அகில உலகையும் அடக்கி ஆளும் இறைவனை தரிசிக்க தானே இமய மலைக்கு யாத்திரை சென்றனர். கடவுளை தரிசிக்க வந்தவர்களையே, கடவுள் என் கை விட்டு விட்டார்?

நண்பர் : அவர்களுக்கு கடவுள் முக்தி கொடுத்து விட்டார் . மோட்சம் அடையவே இவ்வாறு செய்துள்ளார்

நான் : உங்க அப்பா இறக்கும் போதும் இவ்வாறு சொல்வாயா?

நண்பர் : நீ எவ்வாறு என் தனி மனித வாழ்க்கையில் தலையிடலாம்? இவ்வாறு அநாகரிகமாக எவ்வாறு நீ பேசலாம்? ஏன் நீ இவ்வாறு கீழ்த்தரமாக பேசுகிறாய்? நீ என்னுடன் இனிமேல் பேசாதே, நான் இப்போது உன்னை பார்க்க விரும்ப வில்லை, இங்கு இருந்து சென்று விடு (இவை அனைத்தும் உரக்கப்பேசினார்)

நான்: (சிரித்து கொண்டு) டேய் , நிப்பாட்டுடா, அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா இரத்தமாடா?

நண்பர் : (அது பலரும் கூடி இருந்த இடம்) நான் உன்னை பார்க்க விரும்பவில்லை, நீ இங்கிருந்து போகிறாயா அல்லது நான் கிளம்பவா? (அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்)

நான் : அமைதி, அமைதி, அமைதி!!!  நான் இப்போது என்ன அப்படி மோசமாக பேசிவிட்டேன். நீ இவ்வளவு கோபமாக பேச? 

நண்பர் : நான் கீழ்த்தரமானவர்களுடன் பேச மாட்டேன் (செருப்பை போட்டு இருந்த இடத்தில இருந்து கிளம்ப எத்தனிக்கிறார்)

நீதி : கடவுள் பக்தி என்பது பகுத்தறிவுடன் சிந்திக்க அனுமதிக்கவே விடாது. நான் அவர் தந்தை இறந்து விட்டால் என்ன சொல்வாய் என்று கேட்பதின் மூலம் எவ்வாறு அவர் தந்தை இறக்க முடியும் என்று அவர் யோசிக்கவே இல்லை, அவ்வாறு ஒருவர் இறக்க வேண்டும் என்று மற்றவர் சொல்வதால் ஒருவர் இறந்து விடுவாரா என்ன? அப்படி நடக்குமானால் கலைஞர் கருணாநிதி ஆயிரம் முறை அல்லவா இறந்திருக்கவேண்டும்


பக்தர்களே,யோசிப்பீர்!!!

கடவுள் சுற்றுலா சென்று விட்டாரா?


பகுத்தறிவாதி : அய்யா நண்பரே, வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகிறதே, புண்ணிய பூமியான இறைவன் இருக்கும் இடத்தை தேடித்தானே பக்த கோடிகள் அனைவரும் யாத்திரை சென்றனர். ஏனப்பா அவர்களுக்கு இந்த சங்கடங்கள். இப்போது மக்களை காக்க வேண்டிய உங்கள் கடவுள் எங்கேயப்பா இருக்கிறார்?


ஆன்மிகவாதி : அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.


பகுத்தறிவாதி : உங்கள் கடவுள் "வட இந்தியாவில் மழை அதிகம் பொழிகிறது, குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது" என எண்ணி தென் இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா வந்து விட்டாரா?


பக்தர்களே,யோசிப்பீர்!!!

எயிட்ஸ் கர்ம வினைப்பயனா?

பகுத்தறிவாதி : அகிலமும் ஆளும் இறைவனை தரிசிக்க இமய மலைக்கு யாத்திரை வந்த பக்த கோடிகளை, கடவுள் ஏன் கை விட்டு விட்டார்? 

ஆன்மிகவாதி : அவர் அவர்களின் கர்ம வினைப்பயன் 


பகுத்தறிவாதி : கர்ம வினையென்றால் என்ன?


ஆன்மிகவாதி : அதாவது அவர்கள் தங்களுடைய முன் ஜென்மத்தில் செய்த செயல்களின் வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறார்கள்.


பகுத்தறிவாதி : சரி அய்யா, உங்களுக்கு உயிர்கொல்லி நோயான எயிட்ஸ்(AIDS) வந்தாலும் இப்படியே தான் சொல்வீரா? அதற்கு காரணம் கடந்த பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் வெளிப்பாடா? அல்லது இந்த பிறவியில் நீங்கள் ஆடிய ஆட்டமா? எது காரணம் ?


பக்தர்களே,யோசிப்பீர்!!!


பின் குறிப்பு : எயிட்ஸ் நோய் 1981 ஆம் ஆண்டுதான் கண்டு பிடிக்கப்பட்டது.

புதன், 9 ஜனவரி, 2013

யார் தமிழர்?


யார் தமிழர்?
தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?

”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.

அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.

அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?

அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?

இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!

கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?

எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!

அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?

ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?

--மருத்துவர் ஷாலினி.

சனி, 5 ஜனவரி, 2013

சாதியம் என்ற கருவறையின் சாவி பெண்ணின் கர்ப்பப்பையினுள் உள்ளது

சாதியம்  என்ற கருவறையின் சாவி பெண்ணின் கர்ப்பப்பையினுள் உள்ளது.
அப்போ சாதியை எப்படி உடைப்பது? இங்கதான் பெரியார் உதவிசெய்கிறார்.  அவர் பெண்களை கர்ப்பத்தடை செய்ய சொன்னார்  பெண்கள் கர்ப்பத்தடை பண்ணினால் ஆண்மை ஒழியும், ஆண்மை ஒழிந்தால் பெண்கள் விடுதலை பெறுவார் என்றார். இந்த வாதத்தை கொஞ்சம் விரிவு படுத்தி பாருங்கள் . பெண்  விடுதலை பெற்றால் சாதியம்  ஓயும்.  ஆகவே என் இனிய பெண் சமுகமே அனைவரும் கர்ப்பத்தடை செய்யுங்கள். 

சிலர் கேட்க கூடும். ஏன் பெண்களே கேட்கக்கூடும். பெண்  கர்ப்பத்தடை செய்தால் உலகம் எவ்வாறு  விருத்தி அடையும் என்று?. இதற்கும் பெரியார் விடை அளிக்கிறார்,  உலகம் விருத்தி அடையாவிட்டால் பெண்களுக்கு என்ன நட்டம்? விருத்தி  அடைந்தால் என்ன இலாபம்?  உலகம் தோன்றியதில் இருந்து மனித வர்க்கம் இதுவரை பெருகிகொண்டுவருகிறது. இதனால் என்ன லாபம் வந்துவிட்டது? .  இன்று பொருளாதார மேதைகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளுபவர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அது நன்மை அல்ல என்றும் வாதிடுகிறார்கள். ஜனநாயக  அரசாங்கங்கள்  என்று பீத்திக்கொள்ளும் போலி அரசுகளும் இந்த அறிவு ஜீவிகளுக்கு பெரும் பொருள் செலவழித்து மக்கள் தொகை பெருக்கம் நன்மையா தீமையா என்று கண்டுபிடிக்க சொல்கிறது. இதைத்தானே அன்று பெரியார் சொன்னார். அப்போது தலைகால் புரியாமல் குதித்தீர்கள். இப்போது எங்கே போயிற்று அந்த வீரம்?

போலி பொருளாதார மேதைகளே, இருபத்தைந்து ரூபாய் செலவில் பெரியார் என்ற சமுக விஞ்ஞானி சொன்னதை வாங்கி படிங்கள். இலவமாகவும் இணையத்தில் கிடைக்கிறது . ஏழை மக்களின் காசாவது மிச்சமாகட்டும்.