சனி, 5 ஜனவரி, 2013

சாதியம் என்ற கருவறையின் சாவி பெண்ணின் கர்ப்பப்பையினுள் உள்ளது

சாதியம்  என்ற கருவறையின் சாவி பெண்ணின் கர்ப்பப்பையினுள் உள்ளது.
அப்போ சாதியை எப்படி உடைப்பது? இங்கதான் பெரியார் உதவிசெய்கிறார்.  அவர் பெண்களை கர்ப்பத்தடை செய்ய சொன்னார்  பெண்கள் கர்ப்பத்தடை பண்ணினால் ஆண்மை ஒழியும், ஆண்மை ஒழிந்தால் பெண்கள் விடுதலை பெறுவார் என்றார். இந்த வாதத்தை கொஞ்சம் விரிவு படுத்தி பாருங்கள் . பெண்  விடுதலை பெற்றால் சாதியம்  ஓயும்.  ஆகவே என் இனிய பெண் சமுகமே அனைவரும் கர்ப்பத்தடை செய்யுங்கள். 

சிலர் கேட்க கூடும். ஏன் பெண்களே கேட்கக்கூடும். பெண்  கர்ப்பத்தடை செய்தால் உலகம் எவ்வாறு  விருத்தி அடையும் என்று?. இதற்கும் பெரியார் விடை அளிக்கிறார்,  உலகம் விருத்தி அடையாவிட்டால் பெண்களுக்கு என்ன நட்டம்? விருத்தி  அடைந்தால் என்ன இலாபம்?  உலகம் தோன்றியதில் இருந்து மனித வர்க்கம் இதுவரை பெருகிகொண்டுவருகிறது. இதனால் என்ன லாபம் வந்துவிட்டது? .  இன்று பொருளாதார மேதைகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளுபவர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அது நன்மை அல்ல என்றும் வாதிடுகிறார்கள். ஜனநாயக  அரசாங்கங்கள்  என்று பீத்திக்கொள்ளும் போலி அரசுகளும் இந்த அறிவு ஜீவிகளுக்கு பெரும் பொருள் செலவழித்து மக்கள் தொகை பெருக்கம் நன்மையா தீமையா என்று கண்டுபிடிக்க சொல்கிறது. இதைத்தானே அன்று பெரியார் சொன்னார். அப்போது தலைகால் புரியாமல் குதித்தீர்கள். இப்போது எங்கே போயிற்று அந்த வீரம்?

போலி பொருளாதார மேதைகளே, இருபத்தைந்து ரூபாய் செலவில் பெரியார் என்ற சமுக விஞ்ஞானி சொன்னதை வாங்கி படிங்கள். இலவமாகவும் இணையத்தில் கிடைக்கிறது . ஏழை மக்களின் காசாவது மிச்சமாகட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக