சனி, 22 ஜூன், 2013

எவரும் சிந்திப்பதில்லை

கோவில்களில் கருவறைக்குள் மூல விக்கிரகம் என்று கூறி பொம்மைகளை(கடவுள்களாம்!) வைத்து ஏமாற்றும் வேலை இந்த 2011ஆம் ஆண்டிலும் தொடர்கிறதேஎன்பதை எண்ணும்போது ரத்தம் கொதிக்கிறது.

கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்பதை ஒப்புக் கொள்வதற்குத் திறந்த மனமும்,பகுத்தறிவும், துணிவும் தேவையாகும்.
ஆத்திகர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட நடைமுறையில் எந்தக் கடவுளிடம்எந்தப் பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாகத் தூங்கச் செல்கின்றனர்? 

எல்லாவற்றையும் இவர்களே செய்துவிட்டு, தேவையில்லாமல் கடவுள் கருணை என்று 
நம்பித் தொலைக்கின்றனர். நல்லது நடந்து விட்டால் பார்த்தீர்களா?

கடவுள் சக்தி என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார்கள். நல்லது நடக்காமல் வேறுவிதமாக நடந்தால், அப்பொழுது என்ன சொல்லுவார்கள் தெரியுமா?

கிரகம் சரியில்லை, கோவிலுக்கு 30 நாள் எண்ணெய் ஊற்றி விளக்குப் பூஜை செய்ய
வேண்டும். நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிரகடவுளைக் கும்பிட்டோமே, ஒன்றும் நடக்கவில்லையே - இவ்வளவு தான் கடவுள்சக்தியோ என்று எவரும் சிந்திப்பதில்லை

நாகரிகம்

இது இக்காலத்து இளைஞர் சமுகம் அறிந்து, புரிந்து, தெளிந்து பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் .

ஒரு மூன்று நாட்களுக்கு முன்னர் வாடகை மகிழுந்தில் (taxi) செல்லும் போது, நானும் ஓட்டுனரும் பேசிக்கொண்டிருந்தோம் , அப்போது ஓட்டுனர் சாலையோர உணவகங்களில் மக்கள் கையினால் உணவு உண்டு கொண்டிருப்பதை பார்த்த அவர், நீங்கள் ஏன் கையினால் உணவருந்துகிறீர்கள் ? ஸ்பூன் வைத்து சாப்பிடுவதே நாகரிகமானது என்று கூறினார். நான் அவரிடம் பதிலுக்கு " இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று இந்த உலகிற்கே நாகரிகம் கற்று கொடுத்தவர்கள் நாங்கள். நாகரிகம் என்பது உன் உடையிலோ, நடையிலோ , உணவருந்தும் முறையிலோ இல்லை, அவை எல்லாம் நம் வசதிக்காக (comfortablity) மட்டுமே, நாகரிகம் என்பது நம்முடைய செயலில், பேச்சில், எண்ணங்களில் இருக்கிறது என்றேன்.

அவர் இதைகேட்டு ஆம் என்று ஒப்புக்கொண்டார், அவர் சொன்னார் நாங்கள் ஸ்பூனை பயன்படுத்தி பழகி கொண்டோம். நான் "நாங்கள் கையினால் உணவு உண்டு பழகிவிட்டோம்" என்று கூறி இவையெல்லாம் நம்முடைய பழக்கத்தில் வருவது ஒழிய நாகரிகம் எனப்படாது என்று பதிலுரைத்தேன்.

நடந்த இடம் : சிங்கப்பூர்

ஓட்டுனர் : சிங்கப்பூர் சீனர்

நான் : தமிழன்

பெரியார் என் ஆழ்மனத்தின் அடிக்குரல்


எனக்கு வயது இருபத்தி ஏழு. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு பொதுவான சக இளைஞனை போன்று திரைப்படங்களில் காட்டுவதையும், கிரிக்கெட்டையும் பார்த்துகொண்டு தான் இருந்தேன். பின்பு தான் பெரியார் எனக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.  பகுத்தறியும் சிந்தனை என் மனதில் ஆழமாக புகுந்தது. என்னை நானே கேள்வி கேட்டு சீர்தூக்கி பார்க்க ஆரம்பித்தேன்.  இந்த சமுகத்தின் மீதான என் பார்வை மாற ஆரம்பித்தது. நானும் மாறினேன்.இன்னும் பெரியாரை ஆழமாக , நுட்பமாக படிக்க, கேட்க ஆரம்பித்தேன். அவரை படிக்கும் போதும், கேட்கும் போதும் அந்த நினைவில் இருந்து வெளிவர பல மணிநேரங்கள் ஆகும், ஒரு சிலநேரகளில், அந்த நினைவுகளில் இருந்து வெளிவராமலே தூங்கி விடுவேன். இப்போது மீண்டும் ஒருமுறை பெரியாரை பற்றி கேட்டேன். தூங்கி எழுந்து வேலைக்கு செல்ல இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. தேர்வுக்கு படிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஆனாலும் பெரியார் என்னை தூங்க செல்ல அனுமதிக்கவில்லை. அவருடைய சிந்தனைகள் என்னை தூங்கவிட வில்லை. சமுகத்தின் மீது கோபம் அதிகரிக்கிறது. எனக்கு உள்ள பொறுப்பு அதிகரிக்கிறது, என் கண் முன்னே உள்ள வேலைப்பழுளு கூடுகிறது.

ஆம் அவர்தான் பெரியார். பெரியார் என் ஆழ்மனத்தின் அடிக்குரல். என் சகாக்களே, நண்பர்களே பெரியாரை படிங்கள். உங்களையும் தூங்க விட மாட்டார் அவர். நான் இப்போது எப்படி தூங்க போகிறேன் என்று யோசித்துக் கொண்டே எழுதுகிறேன் இதை.

பெரியார் ஏன் முதல்வர் ஆகவில்லை? சீமான் கண்டு பிடிப்பு


பெரியாரைத் தேடி இரண்டு முறை தமிழ் நாட்டு முதல் அமைச்சர் பதவி வந்தது, ஆனால் தந்தை பெரியார் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

# ஏனெனில் தந்தை பெரியார் பச்சை தமிழர் இல்லையாம். சீமானின் புதிய கண்டுபிடிப்பு.. 
அட மடையா, பதவியில் இருப்பவன் அயோக்கியன் ஆக மாறிவிடுவான் அப்படின்னு தானே பெரியார் முதல் அமைச்சர் ஆகல.. பெரியாருடைய எந்த பேச்சில் இருந்து இப்படி ஒரு கருத்தை கண்டுபிடித்தாய். என் அருமை தலைவா சீமான் அவர்களே.

# திருக்குறளுக்கு பரிமேழகர் உரை எழுதி இருக்கார், நம்ம கலைஞர் உரை எழுதி இருக்காக, நம்ம சாலமன் பாப்பையா கூட உரை எழுதி இருக்காக, அய்யா மு.வ எழுதி இருக்காக. அவரவர் அவரருக்கு தெரிஞ்ச அர்த்தத்தை பொருளாக எழுதி இருக்காங்க, திருவள்ளுவர் திரும்பி வந்து கேக்கவா போறாரு ஏன்டா தப்பா உரை எழுதினாய் என்று.

# இன்னைக்கு நம்ம அண்ணன் தலைவர் சீமான் பெரியாருக்கு உரை எழுதுறார்.. நல்லது, எழுதுங்க, பெரியாரை படிங்க. என்ன ஒரே ஒரு வேறுபாடு வள்ளுவனுக்கும் பெரியாருக்கும் . வள்ளுவர் கொஞ்சம் கஷ்டமான வார்த்தைகளில் குறள் எழுதினார். ஆனால் நம்ம பெரியார் , எல்லாருக்கும் புரியற மாதிரி, உச்சி மண்டையில் ஏறுகிற மாதிரி , நமக்கு புரியுற மாதிரி எழுதி /பேசி தொலைசுட்டார் .

# நல்லவன் எல்லாம் அரசியலுக்கு வாங்கப்பா. அயோக்கியன் ஒளிஞ்சுக்கோ . இதுதானே பெரியார் சொன்னது. அயோக்கியபயகள தோலை உரிச்சிக் காட்டியவர் அல்லவரல்லவா பெரியார். போய் பிள்ளை குட்டி இருந்தா படிக்க வையுங்கப்பா ...

# கலைஞர் மேல் கடுப்பு இருந்தா நேரடியா திட்டு. கேள்வி கேளு, நானும் உன் பின்னாடி நிக்கிறேன். நான்கூட கலைஞர் ரொம்ப நல்லவர் ன்னு சொல்லல . தப்பு பண்ணி இருக்காரு, பெரியாரை பயன்படுத்தி இருக்காரு. அதை எதிர்த்து கேள்வி கேளு. அதை விட்டுட்டு புதுசு புதுசா பெரியாருக்கு உரை எழுதுற வேலையை விட்டுருங்க தலைவா. பெரியார் எங்களுக்கு பகுத்தறிவை ஊட்டிட்டுத்தான் செத்து போயிருக்கார்

சாவேஸ்

ஒரு மனுஷன் இறந்தால், அவரை தெரிந்த அனைவரும் இரங்கல் தெரிவிப்பார்கள். துக்கம் விசாரிப்பார்கள். அதுவும் ஒரு நாட்டின் பிரதமரோ, குடியரசு தலைவரோ இறந்து விட்டால், மற்ற நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். அவருடைய சாதனையை,ஆட்சியை புகழ்வார்கள்

அடுத்த நிலையில் இருக்கும் தலைவர் , தொலைக்காட்சியில் தோன்றி மக்களை அமைதியாக இருக்க சொல்லுவார். அந்த நாட்டின் பங்கு சந்தை வீழ்ச்சி அடையும். மற்ற நாடுகளின் பங்கு சந்தைகள் கூட வீழ்ச்சி அடையலாம். ஆனால் வெனிசுலா அதிபர் சாவோஸ் இறந்த போது வளரும் நாடுகளின் பங்கு சந்தை உட்பட அனைத்து பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டன , ஏன்?

See few reactions below to chavez death..

Is Post-Chavez Venezuela an Opportunity for U.S.?

Emerging Stocks Rise as Chavez Death Sinks Venezuela Debt

U.S. President Barack Obama said his government seeks a “constructive relationship with the Venezuelan government.”

he may need to soften his criticism of private corporations after he wins, Eduardo Porcarelli, executive director of investment promotion council Conapri, said.
“Reactivating dialog with Venezuela’s private sector will be a necessity,” Porcarelli said. “Business development must be made viable in the country,

business leaders such as Ronald Pantin, chief executive of Bogota-based oil producer Pacific Rubiales Energy Corp. (PRE), expressed optimism that relations with Venezuela eventually will improve. “Things will change,” Pantin, who was born in Venezuela, said in an interview before Chavez’s death. “Twelve years ago nobody invested in Colombia and now it’s a favorite.”


அப்படி என்ன செய்தார் சாவோஸ் , மற்ற நாடுகளும், தனியார் வங்கிகளும் ஒரு நாட்டின் தலைவர் இறந்த போது ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ?

1) தனியாரிடம் இருந்த 1000 க்கும் மேற்பட்ட எண்ணைக்கிணறுகளை நாட்டுடமை ஆக்கினார் 

2) Chevron (அமெரிக்க எண்ணெய் நிறுவனம்), British Petroleum(இங்கிலாந்து எண்ணெய் நிறுவனம்), Total (பிரான்ஸ் எண்ணெய் நிறுவனம்) உட்பட பல தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் சுரங்கங்களை அரசுடைமை ஆக்கினார் 

3) வெனிசுலா நாட்டின் வறுமையை குறைத்தார்.

4) நாட்டு மக்களுக்கு நல்ல உணவும் வீடும் கிடைக்க மானியங்கள் கொடுத்தார்

5) கல்வியையும், மருத்துவ வசதிகளையும் பெருக்கினார், மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வண்ணம் செய்தார் 

6)மின் மற்றும் மின்னணு நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார்

7) Bank of Venezuela வை நாட்டுடைமை ஆக்கினார்  சிமென்ட் நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார்

8) நாட்டின் பெரிய ஈரும்பு-எக்கு (Steel company) நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கினார் 

9) ஐநா சபையில் பேசும்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பேய் (டெவில்) என்று கூறினார் 

10) வெனிசுலாவில் இருந்த அமெரிக்க தூதரை மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேற சொன்னார்

11) தன்னை கொல்ல அமெரிக்க அரசாங்கம் செய்த சதி வேலைகளை சதிவேலைகளையும் முறியடித்ததுடன், ஆதாரத்துடன் நிருபித்தார்

12) பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) என்ற அமைப்பின் ஏக போக கட்டுப்பாட்டை உடைக்க அர்ஜென்டினா,பொலிவியா பிரேசில் போன்ற நாடுகளுடன் இணைந்து Bank of the South என்ற வங்கியை, IMF க்கு மாற்றாக நிறுவினார் .

இந்த வேலைகளை செய்த காரணத்தினால், அமெரிக்கா உட்பட்ட பல வல்லாதிக்க நாடுகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றன.

மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை

பத்திரிக்கை செய்தி : கரூர் அருகே உள்ள ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவ சமாதியில், எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

#அட மடையர்களே ... எச்சில் இலையில் உருண்டா சட்டையில் (சட்டை போடவில்லையெனில் உடம்பு) அழுக்கு (சோறு) மட்டும் தான் ஒட்டிக்கும். இதை தவிர என்னடா நடந்துவிடும். எந்த பகவானாவது கொஞ்சம் நேரில் வந்து எனக்கு விளக்கம் சொல்ல வருவாரா? 

#கடவுளே  நீ எப்படி நேரில் வருவாய்? (இருந்தால்தானே வருவதற்கு), நீ வராவிட்டாலும் பரவா இல்லை, தயவு செய்து உன் பக்த கோடிகளை அனுப்ப வேண்டாம். பக்த கோடிகள் நம்பிக்கை,தும்பிக்கை ன்னு சொல்லுவாங்க...

#எச்சில் இலையில் உருளுவது சரிதான். தார், கீரிஸ் போன்ற அழுக்கு ஒட்டுனா போகாத பொருட்கள் மீது உருளுங்கடா, அப்போ நான் மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை....

யார் செயல்?

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தந்தை பெரியார்