சனி, 1 செப்டம்பர், 2012

யார் போராளி ?


கணக்கிலடங்காத  ஊழல்களும்   எண்ணிலடங்கா முறைகேடுகளும் முற்றிய இந்தியாவில் யார் போராளி என்ற கேள்வி எல்லாருடைய (ஒரு சிலருடைய மனதிலாவது) இருக்கலாம். அமீர்கான் ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பினால் போராளி என்றார். ஊடகங்களும் மற்றும் பலரும் அண்ணா ஹசாரே ஜந்தர் மந்திரில் உண்ணாவிரதம் இருக்கும் போதோ அல்லது அவருக்கு ஆதரவாகவோ ஒரு மெழுகுவர்த்தி ஏந்துபவரும் போராளியே என்றன(ர்). பெரும்பான்மையான பத்திரிக்கைகளும் மற்றும் திரைப்பட பார்வையாளர்களும் ஷங்கர் போன்ற இயக்குனர்கள் வியாபார ரீதியில் சில சமுக பிரச்சினைகளை படமாக்கினால் அவர்களும் போராளி என்றன(ர்). பேஸ்புக், ட்விட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவிடுவது, லைக் பண்ணுவது, ஷேர் பண்ணுவது போன்ற செயல்களால் பலர் (என்னையும் சேர்த்துதான்) போரளியானோம். வினவு என்ற வலைத்தளமோ நக்சல் பாரி பாதையில் தெருவீதியில் போராடுபவனும், தான் கொண்ட கொள்கையின்  பால் வழிதவறாமல் செயல்படுவனும் மட்டுமே போராளி என்கிறது.

இப்போது நம்ம கதைக்கு வருவோம்.  அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய இளங்கோ கல்லணை என்ற எழுத்தாளன் தன்  ஐந்து வயது மகன் (i am selfish for my own reason) என்னுடைய சொந்த காரணங்களுக்காக நான் ஒரு சுயநலவாதியாக இருக்கிறேன் என்பதை இன்றைய இந்தியா  எவ்வாறு இருக்கிறது என்பதற்கு  அடையாளமாக எடுத்துகொள்ளலாம். நான் பேசிய அல்லது பழகிய பலர் இளம் வயதினர் (ஏனெனில் நானும்).  அவர்கள் அனைவரும் தன் வேலை, தன் குடும்பம், தன் முன்னேன்றம் என்ற நிலையை தாண்டி சிந்திக்க நேரமே இல்லை. அப்படியே இருந்தாலும் கிரிக்கெட், திரைப்படம் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் அவர்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டன. பிறகு எங்க போராளியாக ஆவது? ஆனாலும் எப்படியாவது போராளியாக வேண்டுமே.? எங்கே அதற்கான வழிமுறை இன்றைய இந்தியாவின் புதிய தலைமுறைக்கு ?

வணிக மேலாண்மைவியல் (எம்.பி.ஏ) படித்த பெண்மணிக்கு பாஸ்போர்ட்  விண்ணப்பம் எப்படி செய்வது என்று தெரிய வில்லை. பொறியியல் படித்து, தகவல் தொழிநுட்ப துறையில் பொறியாளனாக வேலை செய்யும், இருபத்தி ஏழு வயது நிரம்பிய (சில பல முறை ஓட்டு போட்ட) ஒரு இளைஞனுக்கு    குடியரசு தலைவர் எவ்வாறு தேர்தெடுக்க படுகிறார் என்று தெரிய வில்லை. சமூக பார்வையாளர்கள் இந்த மெத்த படித்தவர்கள் ஓட்டு போடாத வராத காரணத்தினால் தான் கேடுகெட்ட தலைவர்களை முதன்மை அமைச்சர்களாகவும், பாராளுமன்ற , சட்டமன்ற  உறுப்பினர்களாகவும்,தேர்ந்து எடுக்க படுகின்றனர் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆனால் நான் கூறுகிறேன் "அந்த ஓட்டை போடுவதற்கு  முன்பு அரசியல் பற்றிய அடிப்படை ஞானமும், கருத்துக்களும், அதைப்பற்றி நண்பர்கள், உறவினர்கள்  மற்றும் குடும்பத்தினருடன் பேசினாலே " நீங்களும் போராளியே. (எப்படிப்பட்ட பேச்சுபேச வேண்டும், எந்த மாதியான கருத்தாக்கம் இருக்க வேண்டும் என்பது வேற தனிக்கதை).   குறைந்த பட்சம் எது அரசியல் என்றும், அரசியல் பற்றி படிப்பதும், பேசுவதும், தெரிந்து வைத்து இருப்பதும்  போராளிக்கான அடிப்படை குணங்கள் என்று நான் முடிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக