ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

எதையெதயோ கேட்ட.. இதை கேட்டயாடா?

நம்ம கதாநாயகன் ஒருநாள் வழக்கறிஞரிடம் சென்று எனக்கு திருமணமுறிவு வேண்டும், நீங்கள் தான் பெற்றுத்தரவேண்டும் ன்னு சொல்றாரு.
வழக்கறிஞரோ, "அதனாலே என்னப்பா, பீஸ் கொடுப்பா, என்ன வேணுனாலும் வாங்கி தாரேன்" ன்னு தனது வேலையில் குறியா இருக்குறார்.
தயங்காத நம்ம நாயகன் சட்டைப்பையில் இருந்து சில ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து "சார், நீங்கதான் என்னை காப்பாத்தனும், இந்தாங்க சார், அஞ்சாயிரம் ரூபாய் இருக்கு, மிச்சத்தை பின்னாடி  தர்றேன்" ன்னு சொல்லி  கையை நீட்ட முயற்சி செய்யும் போதே,  நம்ம டுபாக்கூர் வக்கீல் வண்டுமுருகன், பாய்ஞ்சு போய் பணத்தை புடுங்கி, "கவலையை விடுங்க, எல்லாம் நான் பாத்துகிடுறேன்"  சொல்லிட்டு "திருமண முறிவு வாங்கலாம், ஆனால் எதுக்குப்பா? கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ள கசந்து போச்சா? என்ன ஆச்சு" ன்னு கொஞ்சம் அக்கறையோடு விசாரித்தார்.

"அதுவந்து சார், சார்",
அதான் வந்துட்டல்ல, சொல்லுப்பா,

"அதுவந்து, இதுவந்து சார், அத எப்படி சொல்ல சார், நான் எப்படி சார்  அத சொல்ல".
என்னப்பா, வாடகைக்கு ஆள் வச்சா சொல்ல முடியும், உன் வாயை வச்சுதான் சொல்லனும்ப்பா. தயங்காம சொல்லு,

ஆனாலும் நம்ம நாயகன் தயங்கிதயங்கி, வக்கீல் காதுக்குள்ள ரகசியமா சொன்ன விஷயத்தை நான் ஓட்டுகேட்டு உங்களுக்கு சொல்றேன், கீழே படிச்சு பார்த்துக்கோங்க.

நம்ம கதாநாயகன் ஒரு நாளில் நம்ம கதாநாயகியை ஒரு அழகான தெருவோரத்தில் சந்திக்கிறார்.  அது ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிடுகிறது, ஆனால் அண்ணலும் நோக்க அவளும் நோக்க, கண்கள் சந்தித்தன.  காதலும் கனிவும் கவிதையும் செல்பேசி எண்ணும் நொடிப்பொழுதில் பரிமாறப்பட்டன.

பிறகென்ன பேச்சுதான். காலையில் பேச்சு, மாலையில் பேச்சு, இரவில் பேச்சு, கழிவறையில் ஓய்வெடுக்கும் போதும் பேச்சு, தூங்காமலும் பேச்சு. தின்னாமலும் பேச்சு. முழித்தால் பேச்சு,  விழித்தால் பேச்சு, நின்றால் பேச்சு, நடந்தால் பேச்சு,  செல்போன் சார்ஜ் தீர்ந்தாலும், சார்ஜ் ஏத்தியபின்னும் பேச்சு, அப்படி என்னதான் பேசினார்கள்


உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்,
நான் சப்பாத்திதான் சாப்பிடுவேனாக்கும், டயட் கான்சியஸ்.

ப்ளூ கலர் டிரஸ் பிடிக்குமா?
எனக்கும் ப்ளுவும்  பிடிக்கும், பிங்க்கும் பிடிக்கும், எல்லாம் பிடிக்கும், நீ எனக்கு டிரஸ் எடுத்து  கொடுத்தா சாணி கலர் கூட பிடிக்கும்.

எனக்கு சிவகார்த்திகேயந்தான்ப்பா பிடிக்கும், அவன் அழகே தனிப்பா. அவன்னா பொண்ணுகளுக்கு செம கிரேஸ்பா. என் ஆபீஸ்ல எல்லாரும் சிவா பேன்ஸ்..
எனக்கு எல்லா நடிகையும் பிடிக்கும்    பொம்மைக்கு சேலைகட்டி விட்டாலும்
நான் நாள் முழுவதும் பார்ப்பேன். எனக்கு அதுல பாரபட்சமே கிடையாது, பட் இனிமே நீதான் எனக்கு பிடிச்ச ஹீரோயின்,  சாகுற வரைக்கும் உன் மூஞ்சை பார்த்துக்கிட்டே சந்தோசமா சாவேன். ஐ லவ் யு சோ மச் மி டியர்.

நீ சார் வச்சு இருக்கியா, எனக்கு ஆடி கார்ல லாங் ஜர்னி போறது பிடிக்கும்ப்பா
வாங்கிரலாம் டியர்.

ஹனிமூன் ஐரோப்பியன் கன்ட்ரீஸ் போலாமா டியர்?
நீ என்கூட வரும்போது நரகத்துக்கு கூட நான் வர தயார் டியர்.

நம்ம பர்ஸ்ட் சைல்டுக்கு நான்தான் பேர் சூஸ் பண்ணுவேன்.
யுவர் சாய்ஸ் இஸ் மை சாய்ஸ் ஹனி.

பட் நான் சொல்ற ஸ்கூல்லதான் சேக்கணும் டியர்,
ஓகே மச்சான், அறிவுக்கும் எனக்கு ராசி இல்லை அத்தான்.,  நீயே அந்த டிபார்ட்மென்ட் மேனேஜ் பண்ணுங்க அத்தான்.


இப்படி உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல் வரை பேசினாங்க நம்ம ஐடியல் ஜோடி. இவன் கேக்காத விஷயம் இல்லை, அவ சொல்லாத விஷயம் இல்லை, இவங்க பேசினது போதாதுன்னு, ரெண்டு பேரு அப்பா அம்மாவும் சொந்தகாரங்க முதற்கொண்டு பேசி பந்தக்கால் நட்டுனாங்க. நாளும் கிழமையும் பார்த்து கல்யாணமும் முடிச்சு வச்சாங்க.

பிறகு என்னப்பா பிரச்சினைன்னு கேக்குரீங்கதானே?

நம்ம நாயகன் மெதுவா, சங்கட்டப்பட்டு, தயக்கப்பட்டு  வக்கீல் வண்டு முருகன் காதில சொன்ன விஷயம் இதுதான் மக்களே.

"சார் என் வைப் வயசுக்கு வரல, சார்"


நம்ம வண்டுமுருகனுக்கு வந்ததே கோபம், கால்ல போட்டு இருந்த ஷூவை கழட்டி, செம அடி.  என்னை கலாய்க்கனும்னே  வருவீங்களாட ராஸ்கல்ஸ்.
"பிறக்காத குழந்தையை எந்த ஸ்கூல் ல சேக்கணும் கேட்ட நாதாரி, கேக்க வேண்டிய மேட்டரை கேட்டயாடா"

தப்பிச்சேன், பிழைச்சேன்னு, பின்னங்கால் பிடதியில்  அடிக்க ஓடிய நம்ம ஹீரோ, நெக்ஸ்ட் விழுந்த இடம், விவாகரத்து ஸ்பெசலிஸ்ட் வக்கீல் வனஜா


### கதை சொல்லும் நீதி ###  திருமணத்திற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை தேவை, அவசியம், கட்டாயம்.

பின்குறிப்பு : "திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை: - நீதியரசர் என். கிருபாகரன்" என்ற செய்தியை படித்த பாதிப்பில் எழுதப்பட்டது. பெண்களை அவமதிக்கும்  நோக்கில் எழுதப்படவில்லை. இன்னும் சிலதினங்களில் ஆண் வெர்சன் கதையும் சங்கத்தால் வெளியிடப்படும்.