சனி, 22 ஜூன், 2013

மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை

பத்திரிக்கை செய்தி : கரூர் அருகே உள்ள ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவ சமாதியில், எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

#அட மடையர்களே ... எச்சில் இலையில் உருண்டா சட்டையில் (சட்டை போடவில்லையெனில் உடம்பு) அழுக்கு (சோறு) மட்டும் தான் ஒட்டிக்கும். இதை தவிர என்னடா நடந்துவிடும். எந்த பகவானாவது கொஞ்சம் நேரில் வந்து எனக்கு விளக்கம் சொல்ல வருவாரா? 

#கடவுளே  நீ எப்படி நேரில் வருவாய்? (இருந்தால்தானே வருவதற்கு), நீ வராவிட்டாலும் பரவா இல்லை, தயவு செய்து உன் பக்த கோடிகளை அனுப்ப வேண்டாம். பக்த கோடிகள் நம்பிக்கை,தும்பிக்கை ன்னு சொல்லுவாங்க...

#எச்சில் இலையில் உருளுவது சரிதான். தார், கீரிஸ் போன்ற அழுக்கு ஒட்டுனா போகாத பொருட்கள் மீது உருளுங்கடா, அப்போ நான் மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக