சனி, 22 ஜூன், 2013

பக்தி பகுத்தறிவை முடக்கும்

நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் இறை நம்பிக்கையாளர். நான் இறை மறுப்பாளன். ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள். நான் பலமுறை அவரையும், இறை நம்பிக்கையையும், கையாலாகாத கோடிக்கணக்கான கடவுள்களையும் கேலி பண்ணும் போது, அவர் சில மறுப்பும் சொல்லுவார் பல நேரங்களில் பதில் இல்லாமல் சிரிக்கவும் செய்வார். இப்படியே கடந்த காலங்கள் பல. அந்த வகையில் நேற்று வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை பற்றியும் பேசினோம். 
நான்: அடேய் நண்பா, உங்கள் கடவுள்தானே, இந்த உலகத்தை, ஆறுகளை, மலையை, மழையை மற்றும் மக்களை எல்லாம் உருவாக்கினார், பின்பு ஏன் இந்த மாதிரி பெருவெள்ளம் வந்து இலட்ச கணக்கான மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதை உங்கள் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்? அதுவும் இன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டோர் பலர், அகில உலகையும் அடக்கி ஆளும் இறைவனை தரிசிக்க தானே இமய மலைக்கு யாத்திரை சென்றனர். கடவுளை தரிசிக்க வந்தவர்களையே, கடவுள் என் கை விட்டு விட்டார்?

நண்பர் : அவர்களுக்கு கடவுள் முக்தி கொடுத்து விட்டார் . மோட்சம் அடையவே இவ்வாறு செய்துள்ளார்

நான் : உங்க அப்பா இறக்கும் போதும் இவ்வாறு சொல்வாயா?

நண்பர் : நீ எவ்வாறு என் தனி மனித வாழ்க்கையில் தலையிடலாம்? இவ்வாறு அநாகரிகமாக எவ்வாறு நீ பேசலாம்? ஏன் நீ இவ்வாறு கீழ்த்தரமாக பேசுகிறாய்? நீ என்னுடன் இனிமேல் பேசாதே, நான் இப்போது உன்னை பார்க்க விரும்ப வில்லை, இங்கு இருந்து சென்று விடு (இவை அனைத்தும் உரக்கப்பேசினார்)

நான்: (சிரித்து கொண்டு) டேய் , நிப்பாட்டுடா, அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா இரத்தமாடா?

நண்பர் : (அது பலரும் கூடி இருந்த இடம்) நான் உன்னை பார்க்க விரும்பவில்லை, நீ இங்கிருந்து போகிறாயா அல்லது நான் கிளம்பவா? (அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்)

நான் : அமைதி, அமைதி, அமைதி!!!  நான் இப்போது என்ன அப்படி மோசமாக பேசிவிட்டேன். நீ இவ்வளவு கோபமாக பேச? 

நண்பர் : நான் கீழ்த்தரமானவர்களுடன் பேச மாட்டேன் (செருப்பை போட்டு இருந்த இடத்தில இருந்து கிளம்ப எத்தனிக்கிறார்)

நீதி : கடவுள் பக்தி என்பது பகுத்தறிவுடன் சிந்திக்க அனுமதிக்கவே விடாது. நான் அவர் தந்தை இறந்து விட்டால் என்ன சொல்வாய் என்று கேட்பதின் மூலம் எவ்வாறு அவர் தந்தை இறக்க முடியும் என்று அவர் யோசிக்கவே இல்லை, அவ்வாறு ஒருவர் இறக்க வேண்டும் என்று மற்றவர் சொல்வதால் ஒருவர் இறந்து விடுவாரா என்ன? அப்படி நடக்குமானால் கலைஞர் கருணாநிதி ஆயிரம் முறை அல்லவா இறந்திருக்கவேண்டும்


பக்தர்களே,யோசிப்பீர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக