சனி, 22 ஜூன், 2013

பெரியார் ஏன் முதல்வர் ஆகவில்லை? சீமான் கண்டு பிடிப்பு


பெரியாரைத் தேடி இரண்டு முறை தமிழ் நாட்டு முதல் அமைச்சர் பதவி வந்தது, ஆனால் தந்தை பெரியார் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

# ஏனெனில் தந்தை பெரியார் பச்சை தமிழர் இல்லையாம். சீமானின் புதிய கண்டுபிடிப்பு.. 
அட மடையா, பதவியில் இருப்பவன் அயோக்கியன் ஆக மாறிவிடுவான் அப்படின்னு தானே பெரியார் முதல் அமைச்சர் ஆகல.. பெரியாருடைய எந்த பேச்சில் இருந்து இப்படி ஒரு கருத்தை கண்டுபிடித்தாய். என் அருமை தலைவா சீமான் அவர்களே.

# திருக்குறளுக்கு பரிமேழகர் உரை எழுதி இருக்கார், நம்ம கலைஞர் உரை எழுதி இருக்காக, நம்ம சாலமன் பாப்பையா கூட உரை எழுதி இருக்காக, அய்யா மு.வ எழுதி இருக்காக. அவரவர் அவரருக்கு தெரிஞ்ச அர்த்தத்தை பொருளாக எழுதி இருக்காங்க, திருவள்ளுவர் திரும்பி வந்து கேக்கவா போறாரு ஏன்டா தப்பா உரை எழுதினாய் என்று.

# இன்னைக்கு நம்ம அண்ணன் தலைவர் சீமான் பெரியாருக்கு உரை எழுதுறார்.. நல்லது, எழுதுங்க, பெரியாரை படிங்க. என்ன ஒரே ஒரு வேறுபாடு வள்ளுவனுக்கும் பெரியாருக்கும் . வள்ளுவர் கொஞ்சம் கஷ்டமான வார்த்தைகளில் குறள் எழுதினார். ஆனால் நம்ம பெரியார் , எல்லாருக்கும் புரியற மாதிரி, உச்சி மண்டையில் ஏறுகிற மாதிரி , நமக்கு புரியுற மாதிரி எழுதி /பேசி தொலைசுட்டார் .

# நல்லவன் எல்லாம் அரசியலுக்கு வாங்கப்பா. அயோக்கியன் ஒளிஞ்சுக்கோ . இதுதானே பெரியார் சொன்னது. அயோக்கியபயகள தோலை உரிச்சிக் காட்டியவர் அல்லவரல்லவா பெரியார். போய் பிள்ளை குட்டி இருந்தா படிக்க வையுங்கப்பா ...

# கலைஞர் மேல் கடுப்பு இருந்தா நேரடியா திட்டு. கேள்வி கேளு, நானும் உன் பின்னாடி நிக்கிறேன். நான்கூட கலைஞர் ரொம்ப நல்லவர் ன்னு சொல்லல . தப்பு பண்ணி இருக்காரு, பெரியாரை பயன்படுத்தி இருக்காரு. அதை எதிர்த்து கேள்வி கேளு. அதை விட்டுட்டு புதுசு புதுசா பெரியாருக்கு உரை எழுதுற வேலையை விட்டுருங்க தலைவா. பெரியார் எங்களுக்கு பகுத்தறிவை ஊட்டிட்டுத்தான் செத்து போயிருக்கார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக