புதன், 17 அக்டோபர், 2012

வடை போச்சே, பிள்ளையார்


இன்று வீட்டில் (பருப்பு)வடை சுட்டேன்.  நானும் என் நண்பரின் மனைவியும் அப்போது  பேசிக்கொண்டு இருந்தோம். நண்பரின் மனைவி இந்து மத பாரம்பரியத்தில் வளர்ந்த, பின்பற்றி கொண்டு இருக்கும் பெண்.   அவர் சட்டியில் மாவை பிசைந்து போட, நான் அதை வடையாக எடுத்து கொண்டு இருந்தேன்.  அப்போது நடந்த உரையாடல்

தோழி(நண்பரின் மனைவி) :  இன்னைக்கு எப்படியாவது முதல் வடையை கடவுளுக்கு படைத்து விட வேண்டும், அதன் பின்புதான் நாம் சாப்பிட வேண்டும்
நான் : ????
தோழி(நண்பரின் மனைவி) : (நான் சுயமரியாதைக்காரன் என்பது அவருக்கு வெட்ட வெளிச்சம், ஆகவே என்னுடைய உணர்வை  புரிந்து கொண்டு), என் அம்மா அவ்வாறு சொல்வார்கள். ஆகவே நானும் அதை செய்ய முற்படுகிறேன்.
நான் :  அட முட்டாளே, உங்களது நீங்கள் இன்று செய்யும் தொழிலை நேற்று உங்கள் அம்மா செய்தாரா? நீங்கள் (Msc) படித்துள்ளீர்கள், உங்கள் அம்மா படித்துள்ளாரா?
தோழி(நண்பரின் மனைவி)  : இல்லை
 நான் : ஏன் அறிவை மட்டும் காலத்திற்கு ஏற்ப, பாகம் பிரித்து கொள்கின்றிர். மூடத்தனத்தை மட்டும் எக்காலமும் பாகப்பிரிவினை செய்யாமல் அப்படி அறுவடை செய்து கொள்கின்றிர்?
தோழி(நண்பரின் மனைவி) :  பதில் இல்லை.
நான் : உங்களை மத நம்பிக்கை கைவிட்டு, இன்றே பகுத்தறிவாளியாக மாறிவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. தனி அறைக்குள்ளோ அல்லது கோயில்களுக்கோ வழிபாடு செய்வதோடு நிறுத்தி கொள்ளலாமே?  மற்றபடியான மூட நம்பிக்கையான செயல்களை விட்டு விடலாமே? அதுதானே அறிவிற்கு அழகு? படித்த அறிவை பயன் படுத்தவே மாட்டேன் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைவது ஏனோ?

கடைசியில், அவர் கடவுளுக்கு வடையை படைக்கவே இல்லை, ஒரு வேளை "பிள்ளையார் வடை போச்சே", இந்த படுபாவி நாசமாக போக என்று சாபம் விட்டு இருப்பாரோ?

பின்குறிப்பு  1: பல நிமிடங்கள் ஏன் இவ்வாறான மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று அவருக்கு பகுத்தறிவு புகட்டினேன். மாற்றம் எதாவது தென்படுகிறதா என்பது அடுத்த முறை வடை சுடும் போது தெரிய வரலாம்.

பின் குறிப்பு 2 : இதற்கு முன்னர்  பல நேரங்களில் நான் முதலில் சட்டியில் இருந்து எடுத்தவுடன் தின்று இருக்கிறேன், ஆகவே இன்று அவர் அதை தடுத்து விட வேண்டும் என்று நினைத்து  இருக்கலாம். ஆனால் கடைசியில் நடந்தது எதிர்மாறானதே!!!

பின்குறிப்பு 3: இந்த குறையை (பிள்ளையார் சாபத்தில் இருந்து விடுபட)  நிவர்த்தி செய்ய எதாவது பரிகாரம் இருக்காஇருந்தா சொல்லுங்கள் தோழர்களே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக