புதன், 29 ஆகஸ்ட், 2012

கல்லே கல்லே என் மேலே விழாதே


இந்து பாரம்பரியத்தில் வாழும் ஐம்பது வயதை கடந்த என் தாயின் வயதை ஒத்த ஒரு  அம்மையாரிடம்  இன்று பேசிக்கொண்டு இருந்தேன். அவருக்கு என்னுடைய நாத்திக சிந்தனைகளிலும் பகுத்தறிவு செயல்பாடுகளிலும் அவருக்கு ஐயப்பாடு இருந்தது. என்னுடைய திருமண நிகழ்வை எவ்வாறு செயல்படுத்த போகிறேன் என்று என்னிடம் சில நடைமுறை சிக்கல்கள் தொடர்பான சில கேள்விகளை அவர் எழுப்பினார். அந்த உரையாடலின் ஒரு பகுதி இங்கே.

அம்மா: தம்பி நீ கடவுளை நம்ப மாட்டாய், அதெல்லாம் சரி, எப்படி திருமணதிற்கு சோதிடம் பார்க்காமல் எப்படி?
நான் : நான் சோதிடத்தையே நம்ப மாட்டேன், பிறகு எதற்கு அதை பார்க்க போகிறேன்?
அம்மா : பெண் வீட்டில் பார்ப்பார்களே?
நான் : அவர்கள் பார்க்கட்டும். நான் பார்க்க மாட்டேன், என்னை நம்ப சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று சொல்லுவேன்.
அம்மா : தாலியாவது கட்டுவாயா?
நான் : எனக்கு நம்பிக்கை இல்லை, திருமண பதிவு அலுவலகத்தில் ஒரு கையொப்பமே போதுமானது. மணப்பெண் விரும்பினால் தாலி கட்டுவேன். கயிறுதானே கழுத்தில் கட்டினால் என்ன, இடுப்பில் கட்டினால் என்ன?
அம்மா : கட்டு கட்டு, பெண் அனுமதித்தால் எங்கு வேண்டுமானாலும் கட்டு, சரி அதை விடு. சாமி கும்பிட கோயிலுக்கு அழைப்பார்களே?
நான் : போவேன், அது என் வீட்டை போல் இன்னொரு கட்டிடம் மட்டும் தானே.
அம்மா : கோயிலுக்கு சென்று மணப்பெண் மட்டும் சாமி கும்பிட்டால் பார்க்க நன்றாக இருக்காது தம்பி.
நான் : சரி நான் கும்பிடுவேன் இப்படி, "கல்லே கல்லே, என் காலில் விழாதே, விழுந்தாலும் வலிக்காதே, வலித்தாலும் புண் வராதே, புண் வந்தாலும் தயவு செய்து சிக்கிரம் ஆறிவிடு" என்று கும்பிடுவேன்.
அம்மா: ஹாஹா ஹாஹா ஹாஹா, என்னை ரொம்ப நாட்களுக்கு பின்னர் நல்ல சிரிக்க வச்சுட்ட தம்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக