புதன், 29 ஆகஸ்ட், 2012

சாதியும் தமிழரும்


நான் கடந்த இரண்டு வருடங்களாக சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வருகிறேன். சிங்கப்பூரில் உள்ள தமிழர்களிடையே தமிழகத்தில் இருப்பதை போன்ற பெரிய அளவுக்கு சாதிய வேறுபாடுகளை நான் உணரவில்லை, (பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்ற வேறுபாட்டை தவிர வேறு பெரிய வேற்றுமையை நான் காணவில்லை, இந்த வேறுபாடு இந்து மதம் அழியும் வரை இருக்கும் என்பது ), இருப்பினும் எவ்வாறு சாதியை ஒழிப்பது என்ற என் கேள்வி, என் ஆழ்மனதில் இருந்து கொண்டு இருக்கிறது.

சமிபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக தமிழ் இளையர் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். எப்படி சாதியை ஒழிப்பது என்ற நம்முடைய நீண்ட நாள் கேள்விக்கு எனக்கு அங்கே பதில் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கல்லூரி மாணவி, இலங்கை தமிழர்கள் தங்களுடைய அடையாளங்களை, உணர்வுகளை எவ்வாறு வெளிபடுத்துகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை படைத்தார். அந்த கட்டுரைக்காக, இலங்கையில் உள்ள தமிழர்களிடம், எதை அவர்கள் தங்களின் அடையாளமாக கருதுகிறார்கள் என்று ஒரு சிறிய களப்பணி செய்து, அதன் முடிவை வெளியிட்டார்.

அந்த களப்பணி முடிவுகள் தான் எனக்கு உண்மையை புலபடுத்தியது.

சாதியை எவருமே தங்களுடைய அடையாளமாக கருத வில்லை என்பது தான் ஆய்வுக்கட்டுரை முடிவு. அதே நேரத்தில் தமிழும்(37) தமிழன்(27) என்ற அடையாளமும் அவர்களிடையே மேலோங்கி இருந்ததது. ஒருவேளை தாய் தமிழகத்திலும் அந்த  சூழல் வந்தால் தங்கள் சாதிய அடையாளங்களை மறப்பார்கள் என்ற பதில் கிடைத்தது. இன்னொரு கேள்வியும் எழுந்தது எனக்கு, ஆங்கிலயன் நம்முடைய வளங்களை மட்டுமே சூறையாடுவதில் இருந்தான். ஆனால் சிங்களவன் நம்முடைய இனத்தையும், அடையாளங்களையும் அளிப்பதில் அக்கறை காட்டுகிறான், ஆகவே அங்கு மக்கள் தமிழும், தமிழரும் என்ற அடையாளத்தை காப்பதே நமது தலையாய கடமை என்று புரிந்து வைத்துள்ளனர் என்பது பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் பதிந்தது.

ஆகவே சிங்களனே, உனக்கு ஒரு வேண்டுகோள், வா, தமிழகம் வந்து என் தமிழ் இனத்தை அடிமைபடுத்து, அப்படியாவது என் மக்கள் சாதியை மறக்கட்டும்.
என் ஆசை கொடுமையானது தான். ஆனால எனக்கு வேறு வழி தெரியவில்லை. மிச்சம் இருக்கும் ஒரு சில தமிழர்களாவது சாதியை மறக்கட்டும்.

இன்னொரு வேண்டுகோள், உடனே வந்து விடாதே, ஏனெனில் எனக்கு இன்னொரு ஆசையும் உள்ளது, நான் இப்போது மேற்கொண்டு இருக்கும் படிப்பை முடிக்கும் வரை என்னால் தமிழகம் வர இயலாது. இன்னும் இரண்டு வருடங்கள் பொறுமை கொள். நானும் தமிழகம் வந்து சாதியை ஒழிக்கும் அந்த வேள்வியில் கலந்து கொள்கிறேன்.

"சாதிதான் சமூகம் என்றால்,வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' - சட்ட மாமேதை அம்பேத்கார்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக